
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பம் பகுதியில் இன்று பொதுமக்களின் அரவணைப்பில் திளைத்தார் தமிழ்நாட்டு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

418 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட பணிகளை அறிமுகப்படுத்தவும் 391 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் 358 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவியை இரண்டு லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு நேரில் வழங்கவும் சென்ற முதல்வர் மு க ஸ்டாலினை அங்கே இரு மருந்திலும் திரண்ட பொதுமக்கள் வரவேற்ற காட்சி, கண்கொள்ளா மாட்சி!





