
கோலாலம்பூர் ஏப்ரல் 22-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற செராஸ் தொகுதி கெஅடிலான் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.டி. பாலா எனப்படும் தனபாலன் வெற்றி பெற்றார்.
உதவித் தலைவர் பதவிக்கு மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் எஸ்.டி. பாலாவுக்கு 390 வாக்குகள் கிடைத்தன.
எதிர்த்து போட்டியிட்ட செல்வராஜா வுக்கு 332 வாக்குகள் மற்றும் கைரூலுக்கு 52 வாக்குகள் கிடைத்தன.
செராஸ் இரண்டரை மைல் தோகையடி விநாயகர் கோயில் தலைவருமான பாலா அவர்கள் பிரபல மேடை நாடக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.


