
நிகழும் தேசிய மாதத்தில் அண்மை நாட்களாக நம் இந்தியத் தலைவர்களின் தேசிய உணர்வு வெளிப்படும் மையமாக கோலாலம்பூர் லிட்டில் இந்தியா உருமாறி உள்ளது.
அந்த வகையில் மக்கள் சக்தி கட்சி சார்பில் நேற்று பொதுமக்களுக்கு ஜாலூர் கெமிலாங் விநியோகம் செய்யப்பட்டது.
லிட்டில் இந்தியா முச்சந்திப்பில் கடந்து செல்கின்ற வாகனங்களுக்கு டத்தோஸ்ரீ ஆர் எஸ் தனேந்திரன் தலைமையில் அந்தக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் மகளிர் பிரிவினரும் இணைந்து தேசியக் கொடியை வழங்கி தேசிய உணர்வை வெளிப்படுத்தினர்.
நேற்று செவ்வாய்க் கிழமை மாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மஇகா கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச தலைவர் டத்தோ சைமன் ராஜும் கலந்து கொண்டார்.



