
நாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரில் இந்திய எழுச்சி கருத்தரங்கம் இப்பொழுது நடைபெற்று வருகிறது.
மலேசிய இந்தியர் நீதிச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று செப்டம்பர் 20 ஆம் நாள் சனிக்கிழமை காலையிலிருந்து சீன அசெம்பிளி மண்டப வளாகத்தில் இந்த இந்தியர் எழுச்சிக் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

உரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் ப. இராமசாமி, பி.பி.பி. கட்சி தேசியத் தலைவர் தத்து டாக்டர் லோக பால மோகன் ஆகிய இரு அரசியல் தலைவர்களும் இதில் சிறப்பாக கலந்து கொண்டு அரசியல் சமூக பொருளாதார கல்வித் தலங்கள் சார்ந்து மலேசிய இந்திய சமுதாய எதிர்கொண்டு வரும் பல்வேறு பின்னடைவுகளை குறித்து பேசினர்.
இன்றைய ஒற்றுமை அரசாங்கத்தை இப்படி நடத்துவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை கடுமையாக சாடிய பேராசிரியர் பா. இராமசாமி, இந்திய சமுதாயத்திற்கு அன்வார் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார் என்று குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் குடிமக்கள் என்னும் வகையில் மக்களின் விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் எந்த ஆட்சி அமைந்தாலும் காலமெல்லாம் போராட்ட களத்திலேயே நிற்க வேண்டி இருக்கிறது; எதையும் கேட்டு.., கெஞ்சித்தான் பெறவேண்டி இருப்பது, இந்திய சமுதாயத்தின் சாபக்கேடாக இருக்கிறது என்று பேராசிரியர் வேதனை தெரிவித்தார்.
பேராசிரியர் உரையாற்றி முடித்தபின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்ளில் ஒருசில சமூக ஆர்வலர்கள் எழுப்பிய வினாக்களுக்கு தெளிவான பதிலை அளித்தார் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான ராமசாமி.

ராமசாமியைத் தொடர்ந்து டத்தோ லோக பாலா உரையாற்றினார்.
மலாய்த் தலைவர்களின் நிர்வாகத்தில் நாட்டின் ஆட்சி தொடர்ந்தாலும் சிறுபான்மை சமுதாயமான இந்தியர்களுக்கு ஓரளவு சமூக-கல்வி- பொருளாதார தளங்களில் சேவை வழங்கப்படுவதை மறுப்பதற்கு இல்லை என்றார்.

ஆனாலும் தொடர்ந்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வு தொடர்கிறது என்றால், எல்லாக் காலத்திலும் சமூக பொருளாதார சமச்சீரின்மை தொடர்வதுதான் அதற்குக் காரணம் என்று முன்னாள் துணை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கின்ற மித்ரா எனும் சமூக பொருளாதார உருமாற்றத் திட்டத்தினால் மலேசிய இந்திய சமுதாயம் குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் அடையவில்லை என்ற ஆதங்கமும் இந்த கூட்டத்தில் வெளிப்பட்டது.
மலேசிய இந்திய சமுதாயத்தில் ஒற்றுமை நிலைநாட்டப்பட்டால் ஓரளவுக்கு பிரச்சனைகளை நம் சமூகம் மட்டத்திலேயே தீர்த்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

வினோத் ராஜேந்திரன், சுதன் மூக்கையா இருவரும் வழி நடத்திய
இந்தக் கூட்டத்தில் டாக்டர் சிவபிரகாஷ், பால முரளி, டாக்டர் சஞ்சய் ஷான், டாக்டர் புனிதன் ஷான் உள்ளிட்டு வரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நான் ஒரு பேர் வரை கலந்து கொண்டனர்.


