Thursday, April 16, 2026

பிரதமராக செயல்பட அன்வாருக்கு தகுதி இருக்கிறதா?-பொன். வேதமூர்த்தி தொடுத்த வழக்கு ஒத்திவைப்பு!!

பிரதமராக செயல்படுவதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு தகுதி இருக்கிறதா எனக் கேட்டு சட்ட வல்லுனர் பொன். வேதமூர்த்தி தொடுத்துள்ள வழக்கு, அடுத்த மாதம் பிப்ரவரி 25ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசன விதி 42-இன்படி, அன்வார் பெற்ற முழு பொது மன்னிப்பு, தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதற்குத்தானே தவிர, அரசியல் சாசனம் 48 (1) (e) மற்றும் 48 (3) ஆகிய பிரிவுகளின்படி மாட்சிமைக்குரிய மாமன்னரிடமிருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை அன்வார் பெறவில்லை.

அதன்படி தேர்தலில் போட்டியிடுவதற்கான 5 ஆண்டு காலத் தடை நீடித்தது.

இந்த சூழ்நிலையில் 2022 நவம்பர் 19-இல் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்து தம்பூன் தொகுதியில் போட்டியிடுவதற்கான தகுதியை அன்வார் பெற்றிருக்கவில்லை.

அதன்படி, அவர் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அரசியல் சாசன விதிகளின்படி செல்லாது என்ற நிலையில் அவர் நாட்டின் பத்தாவது பிரதமராக தொடரலாமா என்ற வினாவை முன்வைத்து மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவருமான பொன். வேதமூர்த்தி ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று ஜனவரி 27ஆம் நாள் விசாரணைக்கு வந்த நிலையில் பிரதிவாதி அன்வாரின் தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் சிங் உடல் நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்திற்கு வராத நிலையில் வழக்கு, அடுத்த மாதம் பிப்ரவரி பிப்ரவரி 25ஆம் நாள் பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி Alice Loke தெரிவித்தார்.

அதேவேளை, வழக்கறிஞர் டேனியல் ஆல்பெர்ட், சட்டத்துறை அலுவலகத்தில் இருந்து சலாகுடின் ஆகியோர் அன்வார் சார்பில் முன்னிலை ஆகினர்.

செய்தியாளர்கள்

இந்த வழக்கில், எம்ஏபி சட்ட ஆலோசகர் கார்த்திக், தன்னுடைய கார்த்திக் ஷான் நிறுவனத்தின் சார்பில் வழக்காடி வந்த நிலையில், இந்த வழக்கின் வாதியாகிய பொன். வேதமூர்த்தி, தானும் இந்த வழக்கில் வாதாடுவதற்காக முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது.

இனி இந்த வழக்கில் பொன். வேதமூர்த்தியும் இணைந்து வழக்காடுவார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை