
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்து வட மாநிலங்களின் வலிமை அதிகரிக்கப் பட்டால், இனி, தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கும், நம் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும்.

இடஒதுக்கீட்டு உரிமைக்கும் மொழியுரிமைக்கும் போராடி வென்ற நாம், இன்று நம் அரசியல் உரிமைக்காகவும் போராடுகிறோம்.
போராட்டம் கூட அல்ல; இது போர்! இப்போரில் தமிழ்நாடு வெல்ல திராவிட மாதிரி ஆட்சிதான் தொடர வேண்டும்; தொடரும்!

-மு.க.ஸ்டாலின்
-முதலமைச்சர்


