
கோலாலம்பூர் ஜூன் 15-
கூட்டரசு நீதிமன்ற முன்னாள்
நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாதன், மலேசிய ஊடக மன்றத்தின் (MMM) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம், 2025 ஆம் ஆண்டு மலேசிய ஊடக மன்றச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட, ஊடகத் துறைக்கான நாட்டின் சுய-ஒழுங்குமுறை அமைப்பை அவர் வழிநடத்துகிறார்.
இன்று மலேசிய ஊடக மன்றம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், மலேசிய ஊடக மன்றத்தின் இயக்குநர் குழு, மே 26 அன்று நடைபெற்ற கூட்டத்தில் டான்ஸ்ரீ நளினி நியமனத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்ததாக MMM அறிவித்துள்ளது.
ஊடகத் துறைக்கான ஒரு சுதந்திரமான, நம்பகமான மற்றும் பொது நலன் சார்ந்த சுய-ஒழுங்குமுறை அமைப்பாகத் தனது பங்கை வலுப்படுத்துவதில் இந்த நியமனம் ஒரு முக்கிய சாதனை என்று அந்த மன்றம் விவரித்துள்ளது.

நீதித்துறையில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, மலேசியாவில் சுதந்திரமான, பொறுப்பான மற்றும் சுய-ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகத்தை வளர்க்கும் தனது பணியைத் தொடங்கும் இந்த மன்றத்தை வழிநடத்த அவரை மிகவும் பொருத்தமானவராக கருதுகிறது,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
டான்ஸ்ரீ நளினி நீதித்துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடந்த பிப்ரவரியில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அந்தக் காலகட்டத்தில், அவர் உயர் நீதிமன்றத்தின் மூன்று நிலைகளிலும் பணியாற்றியுள்ளார். மேலும், அரசியலமைப்பு மற்றும் வணிகச் சட்டத் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் உட்பட, சுமார் 325 பதிவு செய்யப்பட்ட தீர்ப்புகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


