Thursday, March 19, 2026

பேரறிஞர் அண்ணா – தமிழரசின் விடியல்

தென்னிந்திய அரசியல் வரலாற்றில் தன்னிகரற்ற தலைவர், மக்கள் மனங்களில் நிலையான இடம்பெற்ற பேரறிஞர் அண்ணா, (சி.என்.அண்ணாதுரை) இந்தியாவின் மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் முக்கியமானவராகத் திகழ்கிறார். அவர் ஓர் எழுத்தாளர், சிந்தனையாளர், மேடைப்பேச்சாளர், அரசியல் தலைவர் என்பதற்குமேல், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தின் புகழ்பெற்ற வழிகாட்டியாகவும் விளங்கினார்.

அண்ணாவின் வரலாறு
காஞ்சியில் 1909 ஆம் ஆண்டு பிறந்த அண்ணா, ஆரம்ப காலத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், பின்னர் ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாளராகவும், திரைக்கதையாசிரியராகவும், அரசியல்வாதியாகவும் வளர்ந்த அவர், சமூக மாற்றத்திற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தார்.

திராவிட இயக்கம் மற்றும் சமூக சீர்திருத்தம் என்று தன் சமூக பணியை முன்னெடுத்தார்.
அண்ணா, திராவிடர் கழகத்தின் தொடக்க காலங்களிலேயே பெரியார் ஈ.வெ.இராமசாமியின் சீடராக செயல்பட்டார். அவரின் அரசியல் பயணம், சமுதாயத்தை சாதி, மத வேறுபாடுகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கியது. ஆனால், பிறகு பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1949ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) நிறுவினார்.

அவரின் அரசியல் யுக்திகள் பொதுமக்களிடம் செல்வாக்கு பெற்றன. சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், மொழிப் பாதுகாப்பு ஆகியவை அவரின் தலைமை வழிகாட்டிய முக்கிய கோட்பாடுகளாக இருந்தன.

மொழிப் போராட்டம் மற்றும் அண்ணாவின் சாதனைகள்
அண்ணாவின் காலத்தில், ‘இந்தி எதிர்ப்பு இயக்கம்‘ மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. தமிழகத்தின் மொழி உரிமையை காக்க, அண்ணா தலைமையில் நடந்த போராட்டங்கள் வெற்றி பெற்றன. தமிழகத்தில் தமிழை மாநில மொழியாக அறிவித்ததும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது.

அவர் 1967ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைமையிலேயே ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டிற்கு வந்தது. சாதி அடிப்படையிலான பெயர் சொல்லும் முறையை முடிவுக்கு கொண்டுவந்ததும், சமூக சமத்துவ நோக்கில் மாற்றங்கள் செய்ததும், அவரின் விடுதலை சிந்தனையின் அடையாளங்களாக உள்ளன.

அண்ணாவின் கடைசி நாட்கள்
மிகக் குறுகிய காலத்திலேயே தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் அண்ணா. ஆனால், 1969ல் அவருக்கு புற்றுநோய் வந்தது. மக்களின் பாராட்டுகளுடனும், அவரிடம் கொண்ட அன்புடனும், மக்களின் கண்களில் கலங்கிய நீருடனும் அவரின் நோயில் இருந்து மீண்டு வருவார் என்று மக்கள் காத்துக்கிடந்த தருணத்தில் அண்ணா தனது இறுதி மூச்சைத் துறந்தார்.

அண்ணாவின் பாரம்பரியம்
அண்ணாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது கொள்கைகள் பல அரசியல் மாற்றங்களை வழிநடத்தின. அவரின் சாதனைகள் தமிழக அரசியலையும், சமூகத்தையும் இன்று வரை வழிநடத்துகின்றன.

அண்ணாவின் சிந்தனைகள் மட்டும் தமிழர்களுக்கானவை அல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சமூகநீதி, சமத்துவம், மொழி உரிமை பேணப்பட வேண்டும் என்பதை அவருடைய அரசியல் வாழ்வு உணர்த்துகிறது.

அவர் கூறியதுபோல்,
“சாதி, மதம், மொழி, இவை அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு சமத்துவமான சமுதாயம் தேவை! ஆதலான்,
அண்ணாவின் எண்ணம் என்றும் வாழ்க!

03-02-2025 பேரறிஞர் அண்ணாவின் இனைவுநாள்.

செ.குணாளன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை