Monday, April 20, 2026

செயற்கை நுண்ணறிவு-AI துறையில் இந்திய சமுதாயம் பீடுநடை போட வேண்டும்: -பிரபாகரன் வேண்டுகோள்

உலகம் இப்போது டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது.

இதில் இந்திய சமுதாயம் பின்தங்கி விடக்கூடாது என்பதற்காக Microsoft மற்றும் Pepper labs நிறுவனங்களின் ஆதரவோடு மித்ரா டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவுப் பட்டறையை வெற்றிகரமாக நடத்தி வருகிறது இன்று மக்கள் நீதி கட்சி – பி கே ஆர் நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா நிதியத் தலைவருமான பி பிரபாகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்த வகையில்
இந்திய சமுதாயம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னேற வேண்டும் என்பதில் மித்ரா உறுதியாக இருக்கிறது.

உலகமே இன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் துறையில் சுழன்று கொண்டிருக்கிறது.

மலேசியாவிலும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மின்னல் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

Microsoft மற்றும் Pepper labs நிறுவனம் சுமார் எட்டு லட்சம் மலேசியர்களை இந்த துறையில் கவர்ந்து இருக்கிறது.

இந்தியர்களுக்காக இந்த இரு நிறுவனங்களும் உதவ முன்வந்திருப்பது பாராட்டிற்குரியது என்று மித்ரா தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

மலேசிய பங்கு சந்தை மண்டபத்தில் இன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்ற டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு பயிற்சிப் பட்டறையை பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

Microsoft நிறுவனத்தின் பிரநிதிதி கணேஷ் குமார் மற்றும் pepper labs நிறுவனத்தின் பிரதிநிதி குகன் பதி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை