Thursday, April 23, 2026

பிள்ளையார் பிறந்த நாள் வழிபாடு!மலையாண்டி ஒரேக் கல்லில் இருமாங்காய்!!

மலேசியத் தமிழ் ஊடக வட்டத்தைச் சேர்ந்த நீண்ட கால புகைப்பட கலைஞர் பி மலையாண்டி, இன்றைய விநாயகர் சதுர்த்தி சமய விழாவை முன்னிட்டு நாளிதழ் செய்திக்காக படம் பிடிக்கச் சென்றவர் அப்படியே தானும் விநாயகரை வழிபட்டு, அவன் அருளை நாடினார்.

இன்று உலகெங்கும் வாழ்கின்ற இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பில், மலேசியாவிலும் எங்கெங்கு பிள்ளையார் வழிபாட்டு தலங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் விநாயகரை வணங்கவும் அருளை நாடவும் பக்தப் பெருமக்கள் திரண்டுள்ளதை சமூக ஊடகத் தகவல்வழி அறிய முடிகிறது.

அந்த வகையில் ஊடகராகவும் பக்தராகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக ஒரே சமயத்தில் இரு வேலையை மேற்கொண்டுள்ளார் மலையாண்டி.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை