Friday, April 17, 2026

மூவாயிர குடும்பங்களுக்கு தீபாவளி பொருளுதவி! -துணை அமைச்சர் ரமணன் வழங்கினார்!!

மூவாயிரம் இந்திய குடும்பங்களில் தீப ஒளியை ஏறறும் வகையில் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இரா. ரமணன் பண்டிகைக் கால உதவிப் பொருட்களை நேற்று வழங்கினார்.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்துடன் இணைந்து தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சருமான அவர் இந்த உதவியை வழங்கினார்.

இது, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சுற்றியுள்ள பி40 இந்திய சமூக குடியிருப்பாளர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.

இந்த முயற்சி வணக்கம் மடானி திட்டத்தின் ஒரு பகுதியாகும். தவிர, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி மக்கள் சேவை மையம், அமானா இக்தியார் மலேசியா ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சிய உள்ள மாகும்.

இது மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதையும் உள்ளூர் சமூக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்தகைய சிறிய உதவி, இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்துடன் இணைந்து மகிழ்ச்சி ஒளியையும் கொண்டு வரும் அதன் மூலம் இந்திய சமூகத்திற்கு உதவும் என்று நம்புகிறேன் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

இந்தத் திட்டம் வெறும் நலத்திட்ட உதவி மட்டுமல்ல, தீபாவளிக்கு முன்னதாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அரசாங்கத்தின் அன்பு, ஒற்றுமை, அக்கறையின் அடையாளமுமாகும்.

இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும் சிறந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளன. சமையலறையின் தேவைகளை நிரப்புவது மட்டுமல்லாமல், இதயத்தையும் புதிய உற்சாகத்தால் நிரப்புகிறது.

தீபாவளி என்பது நேர்மையிலிருந்து பிறக்கும் ஒளியைப் பற்றியது.என்று அவர் இன்று சுங்கை பூலோ நாடாளுமன்றத்தின் மக்கள் சேவை மைய வளாகத்தில் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.

தகவல்: செ வே முத்தமிழ் மன்னன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை