Saturday, April 25, 2026

ஊடகவியலாளர் புவனேசுவரன் நகர்மன்ற உறுப்பினராக மீண்டும் பதவி ஏற்பு!

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்களாக 23 பேர் பதவி ஏற்பு

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2026-2027ஆம் தவணைக்கான உறுப்பினர்களாக 23 பேர் இன்று பதவி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மக்கள் நீதிக் கட்சி-கெஅடிலான் சார்பில் 10 பேரும் ஜனநாயக செயல் கட்சி-டிஏபியை பிரதிநிதித்து 8 பேரும் அமானா கட்சியைச் சேர்ந்த 5 பேரும் இதில் அடங்குவர்.

ப.புவனேஸ்வரன், வீ.முருகன், ச.ஸ்ரீகாந்த் ஆகியோர் கெஅடிலானை சேர்ந்த இந்திய உறுப்பினர்களாவர்.

டிஏபியை பிரதிநிதித்து திலகேஸ்வரி, சின்னையா, ராஜேஷ் ராவ் என மூவருடன் அமானா கட்சியைச் சேர்ந்த துரை அன்பழகனும் பதவி உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

கெஅடிலானை சேர்ந்த நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு ப.புவனேஸ்வரன் தலைமையேற்கிறார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ஜூலைஹா பிந்தி ஜமாலுடின் முன்னிலையில் இன்று, ஜனவரி 5 திங்கள் கிழமை காலை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் கட்சியின் தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதவி ஏற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை