
அடுக்குமொழி அனல் தெறிக்க
அசைக்க முடியாத
சிம்மக் குரலாய்
அன்று- சாமிவேலு
பண்பாட்டுச் சிகரம் ஏறி நிதானத்தால் நிமிர்ந்து
புதிய சரித்திரம் எழுதும் கணீரென்ற குரலாய் இன்று- சரவணன்
தமிழுக்காகத் தவம் இருந்து நூல்கள் பல பிரசவித்து
நற்றமிழின் நறுமணம் பரப்பிய சாதனையாளர் அன்று- சாமிவேலு
அந்தத் தமிழ் வேள்வி தடையின்றித் தொடரவே
தன்னையே அர்ப்பணிக்கும் தர்மத்தின் தலைவன் இன்று- சரவணன்
மேடை எனும் போர்க்களத்தில்,
ஒரு கை அசைவில்
ஆயிரமாயிரம் கண்களைக் கட்டிப்போட்ட முழக்கம்
அன்று- சாமிவேலு
தரவுகள் எனும் ஆயுதம் ஏந்தி உரிமைப் பேசி
உலகுக்குத் தமிழ் காட்டும் அறிவுப் புயல்
இன்று-சரவணன்.

தமிழ்ப்பள்ளிகளைத்
தோள்களில் சுமந்த இமயம்
அன்று- சாமிவேலு
தமிழ்க்கல்வி உரிமையை மீட்டெடுக்க
ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரக் குரல்
இன்று- சரவணன்
இனம் வெல்ல வேண்டும் எனும்
அந்தத் தணியாத தாகம்
அன்று அவரிடம் நெருப்பாய் எரிந்தது
இன்று இவரிடம்
சுடராய் ஒளிர்கிறது
–எம்.விவேகானந்தன்



