
பாலஸ்தீனத்தை ஆதரிப்பதில் மலேசியாவின் கௌரவமான நிலைப்பாட்டை ஹமாஸ் பாராட்டுகிறது.ஹமாஸ் அரசியல் குழு உறுப்பினர் கலீல் அல் ஹய்யா இதனை கூறினார்.
பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையுடன் இருக்கும் மலேசியா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, ரஷ்யா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில், கடினமான காலங்களில் முக்கியமான ஆதரவை வழங்குவதில் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்தார்.
கட்டார் மத்தியஸ்தராக இருந்து அவரும் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தை ஒரு நேர்மறையான வளர்ச்சியாக கலீல் வரவேற்றார்.அதே வேளையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் நடத்தப்பட்ட வன்முறை, மிருகத்தனமான ஆக்கிரமிப்பை அவர் கடுமையாக விமர்சித்தார்.இது நவீன வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக அவர் விவரித்தார்.


