
அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பெயரில் நேற்று காவல் துறையினரால் தமிழ் இணையதள பத்திரிகையாளர் காளிதாஸ் சுப்பிரமணி-யத்தின் கைது, தேவையற்றது பொருத்த-மற்றது என்று சட்டத்துறை மேநாள் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்
300-க்கும் மேற்பட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் முறையான அனுமதி இல்லாமல் அங்கு பணிபுரிவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து செய்தி சேகரிப்பதற்காக, காளிதாஸ் இதற்கு முன்னர் 26.3.2026 அன்று பல ஊடகவிய-லாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுடன் குளிம் ஹை-டெக் பூங்காவிற்கு (KHTP) சென்றிருந்தார்.
செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்-கள் சில இடங்களில் இருப்பது அசாதாரண-மானதல்ல, ஏனெனில் அது அவர்களுக்கு பெரும்பாலும் அவசியமானதாகவும் அவசரமானதாகவும் இருக்கும்.
கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டபோது காளிதாஸ் தானாக முன்வந்து ஆஜரானார் என்பதும் தெளிவாகிறது.
எனவே, அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காததால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் கூற முடியாது.
காளிதாஸ் அந்த நேரத்தில் தன் ஊடகப் பணியை மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்றும், அவரைக் கைது செய்வது, தங்கள் கடமைகளைச் செய்யும் பத்திரிகையாளர்-களை அச்சுறுத்துவதாகவும்தெரிகிறது.
மேலும், இந்த விவகாரம் குறித்த விசார-ணையின் போது அவரது வாக்குமூலத்தைப் பெறுவதைத் தவிர காவல்துறைக்கு வேறு எதுவும் செய்ய வேண்டியிருக்க வாய்ப்பு இல்லை என்பதால், அவர் காவல் நிலையத்-திற்கு வந்தபோது அவரிடமிருந்து ஒரு வாக்குமூலத்தை மட்டும் பெற்றிருந்தால் அவரது கைது நடவடிக்கையை எளிதில் தவிர்த்திருக்கலாம்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, அத்துமீறி நுழைவதில் அவருக்குத் தீய நோக்கம் இருந்தது என்று கூற முடியாது குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்ப்பால் தெரிவித்துள்ளார்
இந்தச் சூழ்நிலையில், அவரைக் கைது செய்யாமலேயே இந்த விவகாரத்தை நிச்சயமாக விசாரிக்க முடியும் என்பதால், அவரை உடனடியாக விடுவிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதாக முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட காளிதாஸ் தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளார்.


