Sunday, April 19, 2026

ஈரான்–அமெரிக்கப் போர் இடை நிறுத்தம்: ஹார்முஸ் நீரிணை திறப்பு! -மலேசியா வரவேற்பு!

ஈரான்–அமெரிக்கா இடையேயான கடுமை-யான மோதல் இருவாரங்களுக்கு நிறுத்தப் பட்டுள்ளது. இதன் விளைவாக உலகின் முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதை-யான ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்-பட்டுள்ளது. எண்ணெய் கப்பல்கள் சீராகச் செல்லத் தொடங்கியுள்ளதால், உலக சந்தை யில் விலை நிலைத்தன்மை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய வெளியுறவுத்துறை இந்த நிறுத்-தத்தை வரவேற்று, உலக அமைதிக்கான முக்கிய முன்னேற்றம் எனக் குறிப்பிட்டுள்-ளது.

அனைத்து தரப்பினரும் நல்ல நம்பிக்கை-யுடன் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது.

கடந்த 40 நாட்களாக நீடித்த தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும், உலக பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்த நிறுத்தம் உலக மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

நடுவர் பணியாற்றி வரும் பாகிஸ்தான் நாட்டின் முன்னெடுப்பில் ஈரான் முன்வைத்த 10 அம்சத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்த ஒப்புக் கொண்டதோடு, ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறக்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த இருவார நிறுத்தம் மத்திய கிழக்கு அமைதிக்கான ஓர் இடைநிலை முன்னேற்ற-மாகக் கருதப்படுகிறது.

உலக நாடுகள் இதனை வரவேற்று, எதிர்கால அமைதி ப்பேச்சு எவ்வாறு முன்னேற்றம் காணும் என்பதைக் காண கவனமாகக் காத்திருக்கின்றன.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை