Sunday, May 3, 2026

மலையகத் தமிழிலக்கிய வானம்பாடி இன்னொரு மலையகத்தில் இலக்கிய கானம் பாடுகிறது இவ்வேளையில்..!

உலக இலக்கிய மேடையில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்திக் கொடுத்த ஓலைப் பெட்டகம் திருக்குறள்; அதுதான் ‘தமிழ் மாணவன்’ என்ற முத்திரையுடன் மண்ணறையில் நீள்துயில் கொண்டுள்ள கால்டுவெல் பாதிரியார், பொதுவுடைமைக் கொள்கையின் பெருநிலமாக ஒருகாலத்தில் இருந்த ரஷ்ய தேசத்தின் அரசியல்-கல்வி-யியல்-தத்துவ மேதை, நனிசிறந்த எழுத்தாளர் கோமகன் லியோ டால்ஸ்டாய்;

(‘போரும் அமைதியும்’ என்னும் மாபெரும் இலக்கியப் பெட்டகத்தை சமைத்ததற்காக 1902 முதல் 1906-ஆம் ஆண்டுவரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ‘இலக்கிய நோபல்’ பரிசுக்காக இவரின் பெயர் பரிந்துரைக்கப் பட்டும் அது கிட்டாமல் போனது; அதைப்போல, 1901, 1902 ஆகிய ஈராண்டுகளில் உலக அமைதிக்கான நோபல் பரிசுக்காக இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, அதுவும் எட்டாமல் போனது;

ஆனாலும், உலக இலக்கிய மேதையர் நடுவே நிரந்தர இருக்கை இக்கோமனுக்கு உண்டு; உயர்க் குடியில் பிறந்து அலுங்காமல் குலுங்காமல் அமைதி வாழ்க்கை வாழும்பேறு கிட்டினாலும் அதைக் கருதாது, உலக மக்களின் மேன்மைக்கு தன் சொல்லாலும் செயலாலும் பேனா முனை-யாலும் பெரும்பாடாற்றியவர் டால்ஸ்டாய்;

அத்தகைய டால்ஸ்டாய், உலக அமைதியின் சின்னம் அண்ணல் காந்தி அடிகள், பாரதி-யார் உள்ளிட்ட பெருமக்களை யெல்லாம் இணைத்த நூல் திருக்குறள்.

அதைப்போல, மலேசியத் தமிழர்களை உலக அளவில் இணைக்கும் தொடர் சங்கிலியாக ஒவ்வொரு நாடாகப் பறந்துவரும் மலேசிய சொல்வேந்தர், எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்-தின் இணைவேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் மு. சரவணன் ஈழ மண்ணில் மேத் திங்கள் 2-3ஆம் நாட்களில் நடைபெறும்-நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்னொரு மலைநாடான இலங்கைக்குச் சென்றிருக்கிறார்.

அவ்வண்ணம் சென்ற அவர், இந்த நேரத்-தில்.. ., சற்று முன்னேரத்தில் பாஜக தமிழ் நாட்டுக் கிளையில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்களை பட்டைக் கிளப்பி விரட்டி அடித்த அண்ணாமலையுடன் இலங்கை நாட்டின் அதிபர் மாளிகையில் சிறப்பு விருந்தினர்களாக உள்ளார்.

மாமி(YB) சரவணன், இப்பொழுதில், மலே-சியத் தமிழர்களின் அரசியல் வேந்தராக-வும்(மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசியத் தலைவராக) வலம்வர வேண்டிய சூழலை, 2015இல் கெடுத்தவர் அன்றையத் தலைவர்.

தன்னுடைய இருப்பிற்காகவும் தலைமைக்-காகவும் உற்றுழிஉதவி, நாளேட்டின்வழி தோள்கொடுத்தும் துணைநின்ற சரவண-னாரின்பால் பொல்லாங்குகொண்டு ‘நடுநிலை’ என்ற பெயரில் நடுநிலை தவறியதால், தேசியத் தலைமை என்னும் மகுடம் இவரைவிட்டு சற்று தள்ளி நிற்கிறது.

இன்றில்லாவிடினும் நாளை, நாளையில்லா-விடினும் நாளை மறுநாளென ஒருநாள் இதே மகுடம் இதே சரவணனாரை வந்துசேர்வதை மலேசியத் தமிழ்ச் சமூகம் காணத்தான் போகிறது.

கம்பன் விழாவிற்காக, ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடாகப் பயணிக்கும் டத்தோஸ்ரீ மு.சரவணனை, தமிழ்த் தாய் அரவணைப்பாள் ஒருநாள்!.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை