
சிவகங்கை சீமை, திருப்பத்தூரைச் சேர்ந்த சிராவயல் மஞ்சுவிரட்டுப் போட்டியில் கலந்துகொண்ட காளைகளில் ஒன்று மருண்டு, திசைமாறிய பறவையைப்போல வழிதவறிப் பாய்ந்ததில், எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கண்மாய்க்குள் பாய்ந்து, இறந்தது;
இக்காளையைக் காப்பாற்ற, தைனீஸ் ராஜா என்ற உரிமையாளரும் நீரில் குதித்துள்ளார். நடுவிக்கோட்டையைச் சேர்ந்த இவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
எதிர்பாராத விதமாக மஞ்சுவிரட்டுப் போட்டிக் காளையும் காளையின் உரிமையாளரான காளையும் இறந்தது பெரும் அதிர்ச்சியையும் துயரையும் ஏற்படுத்தி உள்ளது.


