Thursday, April 2, 2026

மித்ரா நிதி சரியான முறையில் இந்திய சமுதாயத்திற்கு சென்றடைவதை உறுதி செய்து வருகிறேன் -பிரபாகரன்

மித்ரா நிதி இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்து வருகிறேன் என்று மித்ரா தலைவர் மாண்புமிகு பிரபாகரன் தெரிவித்தார்.

மித்ரா என்பது சமூக உதவி நிதியம் இல்லை. இது இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்டது.

இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு வெ.100 மில்லியன் மித்ரா நிதி என்பது மிகவும் குறைவு

அதனால் மித்ராவுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கித் தரும்படி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை கேட்டுக் கொண்டுள்ளேன்.

இந்த ஆண்டில் மட்டும் மித்ரா வுக்கு1,300 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

மலேசிய பங்கு சந்தை மண்டபத்தில் Microsoft மற்றும் Pepper labs நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்திய சமுதாயத்திற்கான டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை