Thursday, April 2, 2026

மீஃபா ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இடையிலான ‘Mifa Beyond’ தேசிய கால்பந்து போட்டி!மஇகா – எம்ஐஇடி முழு ஆதரவு!

கோலாலம்பூர் நவ 19-
MIFA எனப்படும்
மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் ‘MIFA Beyond’ தேசிய கால்பந்து போட்டி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள செண்டாயன், அரினா ஐஆர்சி அரங்கில் நவம்பர் 22 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

12 மாநிலங்களுக்கு இடையிலான இந்தப் போட்டியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என்று மீபா தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.

மலேசியா முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக இந்தப் போட்டி மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் சொன்னார்.

ஆண்டுதோறும் மீபா ஏற்பாட்டில் நடக்கும் இந்தப் போட்டி இந்திய இளைஞர்களிடையே கால்பந்தை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவிலான இந்தப் போட்டியில் 12 மாநிலங்களில் இருந்து தமிழ்ப் பள்ளி குழுக்கள் பங்கேற்கின்றன.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமை, ஆர்வம் மற்றும் உறுதியை ஒரு தேசிய அரங்கில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தப் போட்டி வழங்குகிறது என்று குறிப்பிட்டார்.

போட்டிக்கு அப்பால், இந்த போட்டி ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூக வளர்ச்சியின் கூட்டு உணர்வின் கொண்டாட்டமாக செயல்படுகிறது

வரும் நவம்பர் 22 ஆம் தேதி நெகிரி செம்பிலான் செண்டாயன், அரினா ஐஆர்சியில் அரங்கில் நடைபெறும் இந்த போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

12 வயதுக்குட்பட்ட பிரிவில் 450க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதை காண நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.

மேலும் 6 வயதுக்குட்பட்ட (U6) பிரிவில் போட்டியிடும் 70 இளம் விளையாட்டாளர்களின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றார் அவர்.

எதிர்கால வெற்றியாளர்களை உருவாக்குவதற்கான MIFAவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.

“தமிழ்ப் பள்ளிகள், மாநில கால்பந்து சங்கங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தும வகையில் மீபா
துணைத் தலைவர் ‘துவான்’ ராஜேந்திரன், மற்றும் ஸ்ரீ சங்கர் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவின் அயராத முயற்சிகளை நான் பாராட்ட விரும்புகிறேன்”,

அவர்களின் அர்ப்பணிப்பு இந்தப் போட்டியைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது என்றார்.

அவர்களின் அர்ப்பணிப்பு MIFA குறிக்கும் ஒற்றுமை மற்றும் குழுப்பணியைப் பிரதிபலிக்கிறது.

விளையாட்டு மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான எங்கள் நோக்கத்தில் MIED இரண்டாவது ஆண்டாக மீண்டும் ஒரு ஏற்பாட்டு ஆதரவாளராக செயல்படுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இந்தத் தருணத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரனின் தொடர்ச்சியான ஊக்கம் மற்றும் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மஇகா தேசிய விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அண்ட்ரூ டேவிட் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை