
ரவாங்கில் கோவில் இடிப்பு சம்பவத்துக்குப் பிறகு பிரதமர் அன்வார் இப்ராகிம் வெளி-யிட்ட எச்சரிக்கை அறிக்கை புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட-வர்களை “நண்பர்கள்” எனக் குறிப்பிட்டு, சட்டத்தை தாங்களே கையில் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் அறிவுறுத்தி-யிருப்பது, அவரின் முந்தைய பேச்சுகள் ஏற்கெனவே சிலரை ஊக்குவித்து விட்டதாகக் காட்டுகிறது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமுர்த்தி தெரிவித்துள்ளார்.
ராவாங்கில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட-தாகக் கூறப்படும் கோவில் இடிக்கப்பட்டதன் தொடர்பில் கருத்துரைத்த அன்வார் “நீங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும், சட்டத்தை உங்கள் கையில் எடுக்க உரிமை இல்லை” என்று கூறினார். ஆனால் குற்றம் செய்பவர்-களை “நண்பர்கள்” என அழைத்தது, ஏதோ-வொரு சமிக்ஞையை உள்ளடக்கி உள்ளதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
வழிபாட்டு இடங்கள் தொடர்பான நிலக் கொள்கையின் நீண்டகால தோல்விகளால் உருவான கோவில் பிரச்சினையை சட்டப்படி-யான தீர்வுடன் அணுகுவதற்குப் பதிலாக, கோவில்கள் சட்டவிரோதமானவை எனக் கூறிய அவரின் பேச்சு, மத உணர்வைத் தூண்டியதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், அவரது அரசியல் நடவடிக்கை, அன்வர் வகிக்கும் பிரதமர் பதவியின் சட்டப்பூர்வத்தன்மை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-உடன் கையெழுத்திட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுந்துகொண்டிருக்கும் சூழலில் இந்த திசைதிருப்பல் ஏற்பட்டுள்ளது.
‘சட்டத்-தின் ஆட்சி’ குறித்து அவர் பேசி-னாலும் அது பிரதமரிடமிருந்தே தொடங்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர். அரசியலமைப்பு நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டால், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க எந்த உரையும் போதாது என்பதே அவர்களின் கருத்து.
மலேசியாவில் செயற்கையாக உருவாக்கப் பட்ட மதப் பதற்றம் தேவையில்லை; அரசியல் சாசனத்தின் மேன்மை, நிருவாக வெளிப் படைத் தன்மை போன்றவைதான் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


