Sunday, April 19, 2026

மலேசிய நகரத்தார் வர்த்தக சபை புதிய தலைமையுடன் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு கால் பதிக்கிறது!

மலேசிய நகரத்தார் வர்த்தகச் சபை (MNCC) தனது ஆண்டுக் கூட்டத்தை அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது.

இது சபையின் தொடர்ச்சியான வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.
1943 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க All Malaya Nattukottai Chettiar Chamber of Commerce மூலம் தூண்டப்பட்டு, MNCC 2023 ஆம் ஆண்டு நிறுவனர் தலைவர் டத்தோ ஆர் .இராமநாதன் மற்றும் நிறுவனர் செயலாளர் டாக்டர் கணபதி பழனியப்பன் ஆகியோரின் தலைமையில் மறுபிறப்பு பெற்றது.

இதன் நோக்கம் நகரத்தார் சமூகத்தை அதன் வலுவான தொழில் முனைவுத் தோற்றத்துடன் மீண்டும் இணைத்து, வணிக வலையமைப்புகளை வலுப்படுத்துவதாகும்.

இந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில், புதிய தலைமைக் குழு உருவாக்கப்பட்டது. டத்தோ ராமநாதன் தலைமையில், சண்முக கணேஷ் செயலாளராகப் பொறுப்பேற்று MNCC-ஐ அடுத்தக் கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவுள்ளனர்.

கடந்த காலத்தில் MNCC பல முக்கிய முயற்சிகளை முன்னெடுத்தது. இதில் வணிக தொடர்பு அமர்வுகள், முதலீட்டு நிகழ்ச்சிகள், மற்றும் முக்கிய நிகழ்வான Chettinad Business Junction இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 28 வணிகக் கண்காட்சிகள் இடம்பெற்று, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் முக்கிய தளமாக அமைந்தது.

இதற்கு கூடுதலாக, பாராட்டு விழாக்கள், சர்வதேச பிரதிநிதி பயணங்கள் மற்றும் உலகளாவிய வணிக மாநாடுகளில் பங்கேற்பும் மேற்கொள்ளப்பட்டது.

ஆண்டு விருந்தின்போது, சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறப்பான பங்களிப்பு செய்த நான்கு முக்கிய நபர்களுக்கு “Distinguished Nagarathar Award” வழங்கப்பட்டது.

டத்தோ டாக்டர் சுப்ரமணியம் நடராஜன், டத்தோ ஶ்ரீ என். இராமநாதன், டத்தோ பி. காசி, மற்றும் டத்தோ டாக்டர் கதிரேசன் வள்ளியப்பா ஆகியோர் ஆவர்.

இவ்விழா, நகரத்தார் சமூகத்தின் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் தொழில் முனைவுத்துறையில் புதிய உறுதியை வெளிப்படுத்தியது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை