Tuesday, August 4, 2026

இந்திய வர்த்தக சமூக மறுமலர்ச்சிக்கு பாடுபடுவேன்! -பிரபாகரன் வைத்திலிங்கம் உறுதி!!

நூற்றாண்டை எட்டுகின்ற கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் மூலம் நாட்டின் மையப் பகுதியில் இந்திய வர்த்தக சமூகத்திற்கு மறுமலர்ச்சி பாதை காண்பேன் என்றும் கோலாலம்பூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தை சிறந்த முறையில் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்றும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரபாகரன் வைத்தியலிங்கமும் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மோகனா சின்னத்தம்பியும் உறுதி தெரிவித்தனர் .

வரும் ஞாயிற்றுக் கிழமை தோட்ட மாளிகையில் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின்
ஆண்டு கூட்டமும் தேர்தலும் நடைபெறுகிறது.

இம்முறை முக்கிய பதவிகளுக்கு பிரபாகரன் வைத்தியலிங்கம் மற்றும் வி.கே.கே. இராஜசேகரன் அணி போட்டியிடுகின்றன.

தலைவர் பதவிக்கு இராஜசேகரனை எதிர்த்து நடப்பு துணைத் தலைவர் பிரபாகரன் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் நடப்பு உதவித் தலைவர் பன்னீர் செல்வமும் நடப்புச் செயலாளரான மோகனா சின்னத்தம்பியும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் உதவித் தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் சித்ரா தேவியும் பிரபாகரன் அணி சார்பில் கவி மாறனும் போட்டியிடுன்றனர்.

பொருளாளர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் ஐ.ஆர். பிரபாகரன் மற்றும் பிரபாகரன் அணி சார்பில் சண்முக செல்வி போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 14 பேர் கவுன்சிலர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் 9 பேரும் பிரபாகரன் அணி சார்பில் 14 பேரும் போட்டியிடுகிறார்கள்.

பிரபாகரன் அணி சார்பில் கவுன்சிலர் பதவிக்கு இரா. பெருமாள், வர்மன் கந்தசாமி, ராஜேந்திரன், குமரகுரு, குளோரி, புவனேஸ்வரி, ஜெயசூரன், சந்திரா ராம் பிரகாஷ், பிரபாகரன் கோவிந்தன், ராம்குமார், டத்தோ சந்திரசேகரன், வினோதன், பவால் மற்றும் ஜெயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று சிலாங்கூர் கிளப்பில் பிரபாகரன் தலைமையில் உறுப்பினர்களிப
டையே பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

நடப்பு தலைவர் நிவாஷ் இராகவன் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தேர்தலில் தமது அணியை வெற்றி பெற செய்யும்படி பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.

தலைவர் பதவி தேர்தலில் வெற்றி பெற்றால் பல திட்டங்களை வகுத்து கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தை சிறந்த முறையில் வழி நடத்துவேன்;
அதேபோல் சங்கம் மேன்மேலும் சிறக்க கடுமையாக உழைப்பேன் என்றார்.

துணைத் தலைவருக்கு களம்காணும் மோகனா சின்னத்தம்பி கோலாலம்பூர் சிலாங்கூர் மாநிலத்தில் பெண் தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் செயலாளராக இருந்து சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறேன்.

அந்த வகையில் பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கும் பாடுபடுவேன் என்று மோகனா சின்னத்தம்பி தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை