Friday, September 18, 2026

ஜசெக கோட்டை சிரம்பான் ஜெயா’வை இம்முறைக் கைப்பற்றுவோம்! -மஇகா நம்பிக்கை!!

“Ini Kali Lah” முழக்கம் தேசிய முன்னணி பக்கம் திரும்பி உள்ளது; மக்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது என்று சிரம்பான் ஜெயா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜ கோபாலுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ள டத்தோ அசோஜன் தெரிவித்தார்.

வாக்காளர்களின் ஆதரவு தற்பொழுது தேசிய முன்னணி (பிஎன்) பக்கம் திரும்பியுள்ளதாகவும் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அசோகன் தெரிவித்தார்.

சிரம்பான் ஜெயா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜகோபாலுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், நெகிரி மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், அவற்றில் 25 தொகுதிகளில் தேசிய முன்னணி களமிறங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இதில் இரண்டு தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்;

நான்கு தவணைகளாக ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) வசம் இருந்து வந்த சிரம்பான் ஜெயா தொகுதியில், இம்முறை மஇகா வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜகோபால் போட்டியிடுவது மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தொகுதியில் சுமார் 27 விழுக்காடு இந்திய வாக்காளர்களும், 45 விழுக்காடு சீன வாக்காளர்களும் உள்ளனர். வேட்பாளர் தினாளன் ராஜகோபால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்னோ மற்றும் மசீச கட்சியினரும் இணைந்து களப்பணியை முன்னெடுத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் குறிப்பாக சீன வாக்காளர்களிடம் மீண்டும் தேசிய முன்னணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதையுமா உணர முடிகிறது என்று டத்தோ அசோகன் கூறினார்.

சிரம்பான் ஜெயா தொகுதியில் கடுமையான போட்டி நிலவினாலும் மக்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு தேசிய முன்னணிக்கு புதிய நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை