
கோலாலம்பூர் செந்தூல் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் நேற்று மார்ச் 19-ஆம் நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் இந்த ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதன் தொடர்பில் 48 நாட்களுக்கு தொடர்ந்து பூசை நடைபெற்று வந்த நிலையில் நேற்று 48-ஆவது நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.
இதன் தொடர்பில் பிற்பகல் 3:00 மணி அளவில் சங்கு பூசையும் தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்றன.
மாலை ஏழு மணி அளவில் சண்முக அர்ச்சனையும் தீப ஆராதனையும் நடைபெற்ற பொழுது ஜெயபக்தி குயில் நிறுவனத்தின் உரிமையாளர் ரத்தோ டாக்டர் கு செல்வராஜ் கலந்து கொண்டார்.


