
கோலாலம்பூர் ஏப்ரல் 22-
‘மலேசிய கினி’ பத்திரிகையாளர் பி. நந்தகுமார் தொடர்பான வழக்குகுறித்து தனி விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 5 முதல் முழு ஊதியத்துடன் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நந்தா, நேற்று மீண்டும் தன் பணியைத் தொடங்கினார்.
மலேசிய கினி-யின் இயக்குநர் குழு, நந்தாவுக்கு எதிரான ஒழுங்குமுறை நடவடிக்கை குறித்து பரிசீலிக்க ஒரு சுயாதீன உள்நாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதன் முடிவை மதிப்பாய்வு செய்துள்ளது என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் முடிவு மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது
மற்ற நடவடிக்கைகளுடன், பத்திரிகையாளர் தொடர்பில் மலேசியாகினி தனது கொள்கைகளை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு உறுப்பினர்கள் ஆண்ட்ரூ கூ, மஸ்ஜலிஸா ஹம்சா மற்றும் ஷாமினி அறுமுகம் உள்ளிட்டோருக்கும், இந்த செயல்முறையில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுக்கும் தங்கள் நேரம் மற்றும் முயற்சிக்காக குழு நன்றியைத் தெரிவித்துள்ளது.
நந்தாவின் கட்டுரைகளை உருவாக்குவதில் ஆசிரியர் நெறிமுறைகளுடன் இணங்கியதை மதிப்பாய்வு செய்ய இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
மார்ச் 14 அன்று, நந்தா, மனித கடத்தல் கும்பல்கள் குறித்து மேலும் அறிக்கைகளை வெளியிடாமல் இருக்க 20,000 வெள்ளி லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு நடத்துமாறு கோரினார்.
பழம்பெரும் பத்திரிகையாளரான இவர், கடந்த காலங்களில் பல மனித கடத்தல் தொழிலாளர் கும்பல்களை வெளிக்கொணர்ந்ததற்காக அறியப்படுகிறார்.
தகவல்:
செ.வே. முத்தமிழ் மன்னன்,
தலைவர், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்


