
மலேசியவாழ் மக்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக மலேசிய முன்னேற்றக் கட்சி எம்.ஏ.பி. தேசியத் தலைவரும் மலேசிய அரசியல் சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்!
மனிதர்களுக்கு மட்டும் அல்ல; ஓர் அறிவு உயிரியாக இருந்தாலும் இந்த உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் உழைப்பின்றி உய்வில்லை!

அத்தகைய உழைப்பை நினைவு கூர்வதற்காக உலக அளவில் தோற்றுவிக்கப்பட்ட இந்நாளில் மலேசியவாழ் குடிமக்கள் அனைவருக்கும் மீண்டும் உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக மனித உரிமை வழக்கறிஞரும் மலேசிய இந்திய சமுதாயத்தின் தொடர் போராளியுமான பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.


