
மலேசியத் தமிழ்ச் சமூகத்தில் புதிய தலைமுறையை ஊக்குவிக்கின்ற எழுத்தாளர், உரையாளர், சமூகப் பணியாளர் என பன்முகத் திறமையுடன் இன்றும் ஒளிரும் இளைய தமிழவேள் ஆதி.குமணனின் வாழ்க்கை வரலாற்று நூல் அறிமுக விழா, வருகிற 12-07-2025 சனிக்கிழமை, மதியம் 3:00 மணி அளவில், செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் (முதல் மாடி) நடைபெறவிருக்கிறது.
இந்த விழா, மக்களின் இதயக் குரலாகத் திகழும் மக்கள் ஓசை நாளிதழின் முதன்மை ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. தமிழ் ஊடகத்தினர், எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவர் வருகையும் எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்வு, நூலின் முக்கியத்துவத்தைக் கொண்டாடும் முக்கியமான தருணமாக அமையவுள்ளது.

நூல் குறித்து:
இந்த வாழ்க்கை வரலாற்று நூல், ஆதி.குமணனின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையை விவரிக்கும் அரிய ஆவணமாகும். சமூகத்தில் செய்த பங்களிப்புகள், போராட்டங்கள், பயணங்கள், இலக்கிய பங்களிப்பு உள்ளிட்டவை, புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டியின் நேர்த்தியான வடிவமைப்பில் உருப்பெற்றுள்ளது.. ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இடம்பெறவேண்டிய வரலாற்றுப் பதிவாக இந்த நூல் கருதப்படுகிறது.
விழா சிறப்பம்சங்கள்:
நூல் அறிமுக நிகழ்வு மதியம் 3:00 மணிக்கு தேநீர் விருந்துடன் ஆரம்பமாகும். நிகழ்வை பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்து நூலை வெளியிடுகிறார்.
சிறப்பு விருந்தினர்கள்:

டத்தோ கோபி – மக்கள் ஓசை நாளிதழின் நிர்வாக இயக்குநர்,
டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன் – பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரிய துணைத் தலைவர்,
சிங்கப்பூர் சின்னையா – சமூகவியலாளர்
டத்தோ மரியதாஸ் கோபால் – சமூகநலவாளர்
மற்றும் பல பன்முகத்திறமை கொண்ட பிரமுகர்கள்.
அழைப்பு:
இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், சமூக இயக்கத்தினர, அரசியல்-அரசு சாரா அமைப்பினர், மற்றும் பொதுமக்கள் பெரிய எண்ணிக்கையில் பங்கேற்று நிகழ்வை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நூலை நேரில் வந்து பெற்றுக் கொண்டு நூலைத் தயாரித்தவருக்கு ஆதரவு வழங்கும்படி அனைவரையும் வருக வருக என அழைக்கின்றோம்.
தொடர்பு:
செ.குணாளன் – 📞 013-4853128


