Tuesday, February 17, 2026

ஜெயபக்தி குயில் நிறுவனத்தில் வேள்பாரி நாவல்!இலக்கிய ஆர்வலர்களுக்கு மலிவு விலையில் விற்பனை!! -டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் அறிவிப்பு

குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த பரம்புப் பகுதியை ஆண்ட பாரி மன்னன் அரசாட்சி செய்த நிலப்பரப்பு குறுகியதாக இருந்ததால் குறுநில மன்னன் என்று அழைக்கப்பட்டாலும் கொடையில் பெருமன்னனாக வாழ்ந்தவர்.

கடையேழு வள்ளல்களில் ஒருவர் பாரி மன்னன்.

பழந்தமிழ் இலக்கியத்தை பேசுகின்ற பொழுதெல்லாம் இலக்கியவாணர்களும் இலக்கிய ஆர்வலர்களும் பெரும் கவனம் செலுத்தப்படும் குறுநில மன்னர்களில் முதன்மையானவர் பாரி மன்னன்.

பாரி மன்னனா அல்லது பாரி வள்ளலா என்று வரையறுக்க முடியாத இந்த பழந்தமிழ் மன்னனைப் பற்றி இலக்கியவாதியா அரசியல்வாதியா என்று அடையாளம் காண முடியாத சு வெங்கடேசன் எழுதிய பெருங்கதைத் தொகுப்புதான் வேள்பாரி.

இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்களும் சரித்திர நாவல்களில் ஆர்வம் கொண்டவர்களும் படிப்பதற்கு ஏதுவாக இரு தொகுப்பான வேட்பாரி நாவலை தற்பொழுது மலிவான விலையில் ஜெயபக்தி குயில் நிறுவனம் விற்பனைக்கு வைத்துள்ளதாக நூல் கடல் எனப்படும் ஜெயபக்தி புத்தக நிறுவனத்தின் உரிமையாளர் கு செல்வராஜூ தெரிவித்துள்ளார்.

அக்காலத்தே வெளிவந்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, சாண்டில்யனின் வரலாற்று நாவல்களைப் போன்று இக்காலத்தில் எண்ணற்ற வாசகர்களைக் கவர்ந்த நாவல் வேள்பாரி.

‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடராக வெளிவந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ என்னும் வரலாற்றுதா தொடரின் தொகுப்புதான் இரு பாகங்களாக வெளிவந்துள்ள வேள்பாரி பெருநாவல்.

1408 பக்கங்களுடன் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்நூற்பெட்டகம் மணியம் செல்வனின் வண்ண ஓவியங்களோடு விகடன் குழுமத்தினரால் வெளியிடப் பட்டிருக்கிறது.

சாகித்திய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசன் இந்த நாவலை ஆதாரத் தகவலுடன் எழுதியிருக்கிறார்.

ஒரு லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள வேள்பாரி’ நாவலில் அந்தக் காலத்து மன்னர்களின் வாழ்க்கை முறை, தமிழர்களின் பாரம்பரிய வழக்கம், கையாண்ட போர்முறை போன்றன விரிவாக இடம்பெற்றுள்ளன

வாசகர்களின் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கும் வண்ணம் இந்த நாவலுக்கான கதைமாந்தரும் காட்சிகளும் கண்ணையும் கருத்தையும் கவரும்படி இடம் பெற்றுள்ளன.

இத்தகைய நூலை வாங்க விரும்புவோர் ஜேயபக்தி நிறுவனத்தை நாடலாம் என்றும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறதென்றும் செல்வராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை