
கோலாலம்பூர் டிச 3-
ரோயல் சிலாங்கூர் கிளப் (RSC) ஏற்பாட்டில் Dato’ Chu Ah Nge பன்னாட்டு ஜூனியர் கால்பந்து போட்டி 2 இந்த வார இறுதியில் (டிசம்பர் 5-7) கோலாலம்பூரில் உள்ள RSC புக்கிட் கியாரா ஸ்போர்ட்ஸ் அனெக்ஸின் மைதானத்தில் நடைபெறுகிறது.
RSC கால்பந்து பிரிவின் ஜூனியர் கால்பந்து மேம்பாட்டுத் திட்டத்தால் (JSDP) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, கிளப்பின் வருடாந்திர நிகழ்வுகள் நாட்காட்டியில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
வளர்ந்து வரும் நட்சத்திரங்களை கண்டுபிடிக்க இந்தப் போட்டி போர்க்களமாக
விளங்குகிறது.

இந்தப் போட்டிக்கு கிளப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மறைந்த Dato’ Chu Ah Nge பெயரிடப்பட்டது,
2005 இல் போட்டி தொடங்கப்பட்டபோது நிதி உதவியும் வழங்கினார்.
இன்று நடைபெற்ற விழாவில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் Datuk Gerald Rakish Kumar தனது வரவேற்பு உரையில், RSC கால்பந்து மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் போட்டித்தன்மை வாய்ந்த சூழலை வழங்குவதற்காக இந்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.
“RSC Dato’ Chu Ah Nge போட்டி படிப்படியாக பல பிராந்திய கிளப்புகளின் கவனத்தை ஈர்த்தது. எனவே போட்டியின் சர்வதேச அடையாளத்தை நியாயப்படுத்த அவர்களை பங்கேற்க அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்ார்.
இந்த ஆண்டு ஐந்து பிரிவுகளில் 100 அணிகள் பங்கேற்கும். இந்த அணிகள் சிங்கப்பூர், மாலத்தீவு, இந்தோனேசியா, நேப்பாளம் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவை.
8 வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர், 12 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் ஆகிய ஐந்து பிரிவுகளில் போட்டி இடம்பெறும் என்றார்.
தகவல்: செ.வே. முத்தமிழ் மன்னன்


