Sunday, May 3, 2026

ஆக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விடிவு! -பாப்பா ராயுடு

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பழைய தமிழ் பள்ளிகளில் ஒன்றான ஆக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தோட்ட மேம்பாடு காரணமாக பாதிக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத்தின் பாரம்பரிய நகரமும் பழைய அரச நகரமான கிள்ளானை ஒட்டி காப்பார் சாலைப் பகுதியில் ஆக்கோப் தோட்டத்தில் செயல்படும் தமிழ்ப்பள்ளிக்கு, தற்பொழுது மாநில அரசின் முன்னெடுப்பில் விடிவு பிறந்துள்ளது என்று மாநில ஆட்சி குழு உறுப்பினர் பார்ப்பார் ஆயிடும் தெரிவித்துள்ளார்.

இப்பள்ளி, தற்பொழுது அமைந்துள்ள இடத்தில் இருந்து ஏறக்குறைய 11 கிலோ மீட்டர் தொலைவில் 3.2 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்பட்டுதாகத் தெரிவித்த அவர், புதிய இடத்தில் புதுப்பொலிவுடன் விரைவில் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கான ஒப்பந்தம், கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் முன்னிலையில் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் ஆர். ராமச்சந்திரன் ராமன் முன்னிலையில் கையெழுத்தானதாகவம் ஜனநாயக செயல் கட்சி தலைவர்களில் ஒருவரான வு. பாப்பா ராயுடு கூறினார்.

125 மாணவர்கள் கற்று வரும் இதாதமிழ் பள்ளி, புதிய இடத்தில்
விளையாட்டுத் திடல், பொது மண்டபம், வாகன வசதிக்கான இடம் போன்றவற்றை பெற்றிருக்கும் என்றும் பாப்பா மேலும் சொன்னார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை