
தாமரைக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வாரியத்தைச் சேர்ந்த டத்தோ ரெனா நாகசுந்தரத்திற்கு 3.01.2025 வெள்ளிக்கிழமை மணிவிழா நடைபெற்றது.
நாகசுந்ததம் 60 வயதை எட்டியதைத் தொடர்ந்து, அவரின் துணைவியார் டத்தின் ச. கமலவள்ளி இருவருக்கும் பெட்டாலிங் ஜெயா, செக்சன் 9, ஜாலான் பந்தாயில் உள்ள அவர்களது வீட்டில் மணிவிழா நடைபெற்றது.
இதில், டான்ஸ்ரீ துரைசிங்கம் இணையர், டத்தோ ரெனா இராமலிங்கம் இணையர், மஇகா முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரா இணையர், மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் இணையர், ரெ.நாகராஜன் இணையர், ரெ. இராமநாதன் இணையர், பினாங்கு டத்தோ வசந்தராஜன் இணையர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த மணிவிழா தொடர்பான பூசையை கோலாலம்பூர் கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் அர்ச்சகர் சிவானந்த குருக்கள் மற்றும் குழுவினர் நடத்திவைத்தனர்.


