
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் 500 டன் தேங்காய்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தோனேசியாவிலிருந்து முதிர்ந்த தேங்காய்களை வாங்குவதை அதிகரிப்பதன் மூலம் சந்தையில் தேங்காய் விநியோக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய விவசாயச் சந்தைப்படுத்தல் ஆணையம், FAMA முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பண்டிகை காலத்தை முன்னிட்டு, வீட்டு உபயோகத்திற்கு போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்தது.


