
எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவும் நினைவு நாள் நிகழ்வும் ஆண்டுதோறும் கோலக்கில்லான் திருவள்ளுவர் மண்டபத்தில் தவறாமல் இடம்பெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை முன் இரவில் அன்புக்கு நான் அடிமை என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சு. செல்வராசு தெரிவித்துள்ளார்.
வாட்சன் தமிழ்ப்பள்ளி, பந்திங் ஜுக்ரா தமிழ்ப்பள்ளி, சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி, சிம்பாங் மொரிப் தமிழ்ப் பள்ளி ஆகியப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து உதவுவதையும் கலைஞர்களுக்கு ஆதரவளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ள நாங்கள், அதே சிந்தனையுடன் இந்த ஆண்டு எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை
நடத்துகிறோம்.
எனவே இந்த விழாவில் சுற்றுவட்டார பொதுமக்களும் எம்ஜிஆர் ஆதரவாளர்களும் அதிக அளவில் திரண்டு வந்து கலந்து சிறப்பிக்கும்படி செல்வராசு
கேட்டுக்கொள்கிறார்.


