
ஜோகூர் பாருவிலுள்ள சுல்தான் அமினா மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றி வரும் மஞ்சுளா த/பெ சந்திரன், அண்மையில் தாதிமைத் துறையில் முதுநிலைப் பட்டம் (Master in Nursing) பெற்றார்.
அவரின் இந்த கல்விச் சாதனை குடும்பத்தி-னருக்கும் உறவினர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுளாவின் இந்த வெற்றிக்கு தாயார் தவமணி, தந்தை சந்திரன், கணவர் ஸ்ரீ ரெங்கநாதன் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
திருமதி மஞ்சுளா, எதிர்கால வாழ்விலும் பணியிலும் சிறக்க குமரியும் வாழ்த்துகிறாள்.


