
நாடு விடுதலை அடைந்த காலகட்டத்தில் மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தில் அருள்மாமணி என்று புகழப்பட்டவரும் தோட்டத்தொழில்சார் வர்த்தகப் பிரமுகரும் தமிழ் நாளிதழின்வழி தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டவருமான அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளையின் கொள்ளுப்பெயர்த்தியும் பி. தங்கவேலுப் பிள்ளையின் பெயர்த்திமாகிய பி. தங்கமல்லிகாவிற்கும் ஆர். அழகேசனுக்கும் இன்று திருப்பத்தூரில் திருமணம் இனிதே நடைபெற்றது. இதன் தொடர்பில் தகவலும் படமும் தந்து உதவியவர் மலேசியத் தமிழ் ஊடகத்தின் மூத்த புகைப்பட கலைஞர் மலையாண்டி பிடாரன்.


