
திருப்பத்தூரில் அருள்மாமணி வள்ளல் ஆறுமுகம் பிள்ளையின் கொள்ளுப் பெயர்த்தியின் திருமண விழா திருப்பத்தூரில் இன்று பிப்ரவரி மூன்றாம் நாள் நடைபெற்றது.
ஆறுமுகம் பிள்ளை, வள்ளல் ரெங்கசாமி பிள்ளை குடும்பங்களின் நண்பரும் தமிழ்நாட்டு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரிய கருப்பனும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதே திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மலேசியாவில் இருந்து தமிழ் அச்சு ஊடகத்தின் மூத்த புகைப்பட கலைஞர் மலையாண்டியும் சென்று இருந்தார்.
திருமண விழாவில் அமைச்சரை சந்தித்த மலையாண்டி அவருக்கு சிறப்பு செய்தார்.


