
திருமுருக கடவுளுக்கு கொண்டாடப்படும் விழாக்களிலேயே தலையாய விழாவான தைப்பூசத் திருவிழா நேற்று பிப்ரவரி 11ஆம் நாள் உலகெங்கும் தமிழர் வாழ்கின்ற பகுதிகளில் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் மலேசியத் திருநாட்டின் வடபுலத்தில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்திலும் தைப்பூச திருவிழா வழக்கமான பாரம்பரிய சமயக் கூறுகளுடன் கொண்டாடப்பட்டது.
அதன் தொடர்பில் மாநில முதல்வர் மாண்புமிகு சௌ கான் இயூ-வும் ஆலயத்திற்கு வருகை மேற்கொண்டார். அவரை, தாமரை வர்த்தகக் குழுமத்தின் சார்பில் அதன் இயக்குனர் டத்தோ ரெனா ராமலிங்கம் எதிர்கொண்டு வரவேற்று சிறப்பு செய்தார்


