
2025 ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தின் தலைப்பு ‘வேகம் எடுத்து செயல் படுவோம்’ ஆகும். இது பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
சமூகம் முன்னேற வேண்டும் என்றால், பெண்களின் முன்னேற்றமும் அவசியம். கல்வி, தொழில், அரசியல், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களின் சம பங்கேற்பு மிக முக்கியம். ஆனால், இன்னும் பல இடங்களில் சமத்துவம் முழுமையாக கிடைக்கவில்லை.
அதனால், இப்போது செயல்பட வேண்டும்! மாற்றத்துக்காக காத்திருக்க முடியாது. ஒவ்வொருவரும் தன் வாழ்க்கைச் சூழலில் பாலின சமத்துவத்தை வளர்த்தெடுக்க முனைந்து செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பெண்களின் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். பாலியல் சீண்டல் மற்றும் வன்முறைக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சுதந்திரமாக முடிவெடுப்பதற்கும் தலைமை வகிப்பதற்கும் பெண்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இன்றுமுதல், நாம் அனைவரும் வேகம் எடுத்து செயல்படுவோம்!
பாலின சமத்துவம் என்பது எதிர்கால இலக்கு அல்ல – அது இன்றே எட்ட வேண்டிய நோக்கம்!
முனைவர் ச. கலைவாணி தலைவர் – மலேசிய இந்து சங்க தேசிய மகளிர் பிரிவு


