
டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், மார்ச் 29:
மலேசியாவில் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்கள் அனைவருக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் 2025 தெலுங்கு புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பல இன மக்களும் பல சமயத்தினரும் ஒருமித்துவாழும் இந்த மலேசியத் திருநாட்டிற்கு இப்பொழுது பண்டிகை காலம் மலர்ந்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு சமய விழாக்கள் இடம் பெற இருக்கின்றன.
அந்த வகையில் நாளை மார்ச் 30- ஆம் நாள், உலகெங்கும் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்கள் தங்களின் உகாதி புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த இனிமையான இன்பத் தருணத்தில் மஇகா-வும் பங்கெடுத்துக் கொள்ளும் அதேவேளை, மலேசியாவில் வாழுகின்ற அனைத்து தெலுங்கு மக்களும் வளமான வாழ்வையும் நலமான எதிர்காலத்தையும் பெற்றிட மஇகா சார்பிலும் குடும்பத்தின் சார்பிலும் ‘உகாதி சுபகாஞ்சலு’-இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக மலேசிய நாடாளுமன்ற மேலவையின் மேனாள் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


