
ஈப்போ, ஜூன்09: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அடுத்தத் தலைவராக சிவாலெனின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நாட்டின் தனித்துவ எழுத்தாளர்களில் ஒருவரான சிவாலெனின் கடந்த ஈராண்டு காலமாக துணைத் தலைவராகவும் அதற்கு முன்னர் செயலவை உறுப்பினராகவும் பொறுப்பேற்றிருந்த நிலையில் புதிய தவணைக்கு தலைவராக போட்டியின்றி தேர்வானார்.
பேரா மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் தன் எழுத்தால் நன்கு அறிமுகம் பெற்றவரான சிவாலெனினின் தலைமைத்துவத்தில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறந்த இலக்கை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அடுத்த நிர்வாகக் குழு தொடர்பில் முன்னதாக நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் செயலாளராக கவிஞர் மகேந்திரன் நவமணியும் துணைச் செயலாளாராக திருமதி இராதை சுப்பையாவும் போட்டியின்றி தேர்வான நிலையில் சங்கத்தின் புதிய பொருளாளராக திரு. ஆறுமுகமும் போட்டியின்றி தேர்வானார்.
இருப்பினும் சங்கத்தின் துணைத்தலைவர் மற்றும் செயலவைக்கு போட்டி நிலவிவது. .
துணைத் தலைவருக்கு நடப்புச் செயலாளர் ச.முனியாண்டியும் நடப்பு பொருளாளர் சபா.கணேசனும் போட்டியிட்ட நிலையில் 10 செயலவை உறுப்பினர் பதவிக்கு 11 பேர் களத்தில் இறங்கினர்.
முன்னதாக நடப்புத் தலைவர் கவிஞர் ந.கு.முல்லைச் செல்வன் புதிய தலைமைத்துவத்திற்கும் இளையோர்களுக்கும் வழிவிட்டு மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய முன்தினம் நடைபெற்ற வேட்புமனு தாக்கலுக்கு முனைவர் திலகவதி தலைமையேற்றார்.


