
மக்களின் இதயக் குரல் மக்கள் ஓசை நாளிதழின் ஆதரவில் மக்கள் ஓசை புகைப்பட கலைஞர் பி. மலையாண்டி கைவண்ணத்தில் உருவான ‘இளைய தமிழவேள்’ ஆதி குமனனின் நூல் அறிமுக விழா பினாங்கு, செபராங் ஜெயா கருமாரியம்மன் ஆலய முதல் மாடி மண்டபத்தில் ஜூலை பன்னிரண்டாம் நாள் சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
இதில் கலந்து கொள்ளும்படி, அரசுசாரா இயக்கத் தலைவர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், உயர்கல்வி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரையும் மக்கள் ஓசை பினாங்கு மாநில செய்தியாளரும் சமூக ஆர்வலரும் எழுத்தாளரும் கவிஞருமான செ. குணாளன் கேட்டுக்கொள்கிறார்.


