
மலேசிய இந்து சங்கத்தில் நிலவும் தொய்வை அகற்றவும் புத்துயிர் ஊட்டவுமே நடப்புத் தலைவர் தங்க கணேசனுடன் கரம் கொத்துள்ளதாக சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்க 2025 ஆண்டு கூட்டத்தின்வழி மத்திய செயலவைக்கு போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள மோகன், மலேசிய இந்து சங்கத்தின் வளர்ச்சிதான் தனக்கு முக்கியம் என்றும் எந்தச் சூழலிலும் சங்கம் முடங்கி விடக்கூடாதென்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதன் அடிப்படையில் தான் மீண்டும் இந்து சங்க மத்திய செயலவையில் இடம் பிடிப்பதற்காக தற்காலத் தலைவர் தங்க கணேசனுடன் அணி சேர்ந்துள்ளதாகவும் கூறினார்.
இந்து சங்கத்தை தன் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமோ மீண்டும் தேசியத் தலைவராக வரவேண்டும் என்ற எண்ணமோ தனக்கு சிறிதும் இல்லை
எங்கள் வெற்றி அணி வெற்றி பெற்றால் நடப்புத் தலைவர் தங்க கணேசன்தான் அப்பதவியில் தொடர்வார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று டத்தோ மோகன்ஷான் உறுதியளித்துள்ளார்.


