
2025 பொங்கல் பண்டிகை அனைவருக்கும் வளப்பத்தையும் நல்லாசியையும் வழங்கிட காசி விசுவநாதர் அருள் வழங்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் சிவநெறிச் செல்வர் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
சமயங்களுக்கிடையேயும் சமூகங்களுக்கு இடையிலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும் வகையில் அனைவரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
குறிப்பாக இந்து மக்களுக்கு இந்தப் பண்டிகை நலத்தையும் வளத்தையும் கொண்டுவர மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக ஸ்ரீகாசி சங்கபூசன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.


