
கடந்த வாரம் வெளியான
SPM தேர்வு முடிவுகளில் நன்னேறி கல்வி (Pendidikan Moral) பாடத்தின் மதிப்பீட்டு முறையைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து நான் தீவிர கவலை வெளியிட விரும்புகிறேன் என்று பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.
குறிப்பாக, பல பாடங்களில் A+ பெறும் திறமையான மாணவர்கள் கூட நன்னெறி பாடத்தில் A+ பெற முடியாமல் இருப்பது கவலைக்குரியது.
இந்த நிலைமை, KBAT அடிப்படையிலான மதிப்பீட்டு முறை மற்றும் இந்தப் பாடத்தின் மதிப்பிடும் நடைமுறைகள் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
நெறிப்பண்புக் கல்வி மாணவர்களின் மதிப்புகள், ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை உருவாக்க வேண்டிய பாடமாக இருக்க வேண்டும்; அவர்களின் கல்விசார் சிறப்பை தடுக்கும் காரணமாக இருக்கக் கூடாது.
மொத்தத்தில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள், இந்தப் பாடத்தின் மதிப்பீட்டில் உள்ள தெளிவின்மை அல்லது ஒருமித்தமையின்மையால் முழுமையான முடிவுகளைப் பெற முடியாமல் இருப்பது நியாயமற்றது.
இது மாணவர்களின் உந்துதலையும், நாட்டின் கல்வி அமைப்பின் நியாயத்தன்மை குறித்த பார்வையையும் பாதிக்கக்கூடும்.
இதனை முன்னிட்டு, நான் மலேசிய கல்வி அமைச்சை கீழ்க்கண்டவற்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்:
I. நன்னெறி கல்வி பாடத்தின் மதிப்பீட்டு முறை மற்றும் மதிப்பெண் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
II. மதிப்பீட்டு செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமித்த தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
III. மாணவர்களின் நெறி புரிதல் மற்றும் மதிப்புகளின் உட்கொள்ளலை மதிப்பிடுவதற்கு மேலும் நியாயமான மற்றும் பொருத்தமான மாற்று அணுகுமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் PPP தேசிய இளைஞர் அமைப்பு, கல்வி அமைப்பு நியாயமானதும் வெளிப்படையானதும் ஆக இருந்து, மாணவர்களின் முயற்சி மற்றும் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
மதிப்பீட்டு அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக எந்த மாணவரும் பாதிக்கப்படாதவாறு உறுதி செய்வது அவசியம். இளைஞர் தலைமுறையின் எதிர்காலம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
(செ. வே. முத்தமிழ் மன்னன்)


