Thursday, April 2, 2026

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி மின்சார உபகரணங்களை வழங்கியது!

பூச்சோங் ஏப் 4-
நாட்டை உலுக்கிய
பூச்சோங் புத்ரா ஹைட்ஸ்சில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான பிபிபி பொறுப்பாளர்கள் அவர்களுக்கு மின்சார உபகரணங்களை வழங்கினர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு செல்லும்போது இந்த மின்சார உபகரணங்கள் பெரிதும் தேவைப்படும்.

தற்போது ஏராளமான உடமைகள் சேதம் அடைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

தீச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை தெரிவிக்கவும் அவர்களுக்கு உதவி வழங்கவும் தற்காலிக இடமாற்ற மையத்தில் (PPS) தங்கியுள்ள மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நம் சகோதரர்கள் ஹரி ராயாவை(நோன்புத் திருநாளை) கொண்டாடும் இந்த நேரத்தில் நிகழ்ந்த சம்பவத்தால் சுற்றுச்சூழலும், வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது மிகவும் வேதனையை அளித்தது

இந்தச் சம்பவத்தை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.

இந்த ஒற்றுமை மலேசிய மக்களின் வலிமையின் அடையாளம்; இந்த மாதிரியான பேரிடரில் இருந்து நாம் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை